"மச்சி, சூப்பர் படம்டா.."
"பாபு உற்சாகத்தில் துள்ளினான். "ஏன்டா, இந்த தலைவலியோடு நைட் ஷோ சினிமாவுக்கு வந்தோம்" என வெற்றி மனதில் நொந்து கொண்டான்".
சென்னையின் ஒரு மல்டிபிளக்ஸில், 18 டிகிரி ஏசி குளிரில், மல்லிகைப்பூ ரூம் ஸ்ப்ரே வாசத்திலும் பாபுவின் ஆதர்ச நடிகர் திலீப் நடித்த திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. பாபு, திலீப்பின் ஒவ்வொரு வசன உச்சரிப்பிற்கும் ஒரு விசிலை உதிர்த்துக் கொண்டிருந்தான். எங்கிருந்து எறியப்பட்டன என தெரியாமல், வந்து தன் மூக்கில் ஒட்டிய ஜிகினா பேப்பர்களை
தட்டி விட்டவாறே எரிந்து கொண்டிருந்தான் வெற்றி.
"வெற்றி, என்னா மாஸு பாருடா திலீப்புக்கு.."
"டேய் கொஞ்ச நேரம் பேசாம இரேண்டா..!ஏன் இவ்ளோ எக்ஸைட் ஆகுற..?"
"அங்க பாருடா சண்டையை..என்னாமா அடிக்கிறார்ன்னு.."
"ஏண்டா உயிரை வாங்குற..படத்தை பாறேண்டா"-தலைவலியில் கத்தினான் வெற்றி.
வெற்றி கத்திய காட்டுக் கத்தலில்,அதற்கு மேல் ஒன்றும் பேசாமல்,அமைதியாக படத்தைப் பார்த்தான்.
இரவு 1.30 மணி.படம் முடிந்து வெற்றியும், பாபுவும் வெளியே வந்தார்கள். வெற்றி, தியேட்டர் சிப்பந்தியிடம் டூவீலர் டோக்கனை காட்டியவாறே, தன் யூனிகார்னை ஸ்டார்ட் செய்து உயிரூட்டினான். அந்த காம்ப்ளக்ஸை விட்டு வெளியே வந்தவுடன் பாபு,பில்லியனில் தொற்றிக் கொண்டான்.
பைக்கின் வேகக்குறி முள் 40க்கும் 50க்கும் இடையில் துடித்துக் கொண்டிருந்தது.எங்கே திலீப்பை சிலாகித்தால்,வெற்றி கடுப்பாகிவிடக் கூடமோ..? என்ற தயக்கத்தில் பாபுவும் அமைதியாகவே அமர்ந்து வந்தான். இரவு நேரக் காற்று, இருவர் வாயிலும் மூக்கிலும் புகுந்து கண்கள் வழியே நீராய் வந்து கொண்டிருந்தது.
எதிரில் ,கருப்பா மெரூனாவென அனுமானிக்க முடியாத ஒரு நிறத்தில், ஹோண்டா சிட்டி கார் ஒன்று வந்து கொண்டிருக்க ,தன் வேகத்தை மெல்ல குறைத்தான் வெற்றி.அவர்கள் எதிர்பாராமல், ஹோண்டா சிட்டியும் தன் ஹெட்லைட்டின் வெளிச்சத்தைக் குறைத்து, இவர்களருகில் வந்து நின்றது. அருகில் வந்து நின்றதும் கவனித்தான்.கார் கருப்பு கலர்தான். ஆந்திரா ரெஜிஸ்ட்ரெஷன்.
"தம்பி,அவசரம்..கால்ல அடி பட்டிருக்கு..இஙக பக்கத்துல ஆஸ்பத்திரி எதுனா இருக்கா..?" காரில் இருந்த படியே,"லு" க்களின் வாசனையே இல்லாமல் அட்சர சுத்தமாக தமிழில் பேசினான்.
"இங்க இருந்து ஒரு நாலு கிலோமீட்டர் போனா,பிரியா நர்ஸிங் ஹோம்ன்னு ஒன்னு இருக்கு ஸார்"-வெற்றி.
சொல்லிமுடித்த அடுத்த வினாடி, ஹோண்டா சிட்டி எதிர் திசையில் சீறியது.வெற்றியும் ஆக்ஸிலேட்டரை முறுக்கி,நாற்பதில் சென்று கொண்டிருந்தான்.பாபுவிற்கோ அவன் காரை விட்டு கீழே இறங்கி அட்ரஸ் கேக்காத்தைப் பற்றி கோபம்."அவருக்குத்தான் கால்ல அடி பட்டிருந்தேச்சேடா.." என்று அவனை சாமதனப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான்.
"மச்சி, வண்டியை நிறுத்து.. ஏதோ ஆக்ஸிடெண்ட்டுடா..!"-பாபு.
வேண்டாவெறுப்பாய்,வண்டியை நிறுத்தி விட்டு, கிருத்திகை நேரத்து காக்கைகளாய் கூடியிருந்த மக்களை விலக்கிக் கொண்டே, உள்ளே எட்டிப் பார்த்தான் வெற்றி. முதுகுத்தண்டு சில்லிட்டது. எஸ்..அந்த அட்ரஸ் கேட்டவன்.. காலில் அடிபட்டு உயிரை விட்டிருந்தான்.முகத்திலும் ஆங்காங்கே ரத்தத் துளிகள்..அவனேதான்..!
ஓட்டமும் நடையுமாக,ஒரு வித பயத்துடன்,பைக்கை உயிர்ப்பித்து சென்று கொண்டிருக்க பாபு வெற்றியை முன்பை விட கொஞ்சம் அதிகமாக இறுக்கிப் பிடித்திருந்தான்.இருவருக்கும் எச்சில் வறட்சியால் நாக்கு மேலே ஒட்டிக் கொண்டு வார்த்தை குளறியது. தற்செயலாக, பயத்தில் பாபு திரும்பிப் பார்க்க, பின்னால் அந்த கருப்புக்கலர் ஹோண்டா சிட்டி இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. மங்கலான வெளிச்சத்தில் அந்த காரின் நம்பர் போர்டைப் பார்த்தான்....AP01 BZ 5237.
Next மீட் பண்ணுவோம்....
♠ராஜூ♠
"பாபு உற்சாகத்தில் துள்ளினான். "ஏன்டா, இந்த தலைவலியோடு நைட் ஷோ சினிமாவுக்கு வந்தோம்" என வெற்றி மனதில் நொந்து கொண்டான்".
சென்னையின் ஒரு மல்டிபிளக்ஸில், 18 டிகிரி ஏசி குளிரில், மல்லிகைப்பூ ரூம் ஸ்ப்ரே வாசத்திலும் பாபுவின் ஆதர்ச நடிகர் திலீப் நடித்த திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. பாபு, திலீப்பின் ஒவ்வொரு வசன உச்சரிப்பிற்கும் ஒரு விசிலை உதிர்த்துக் கொண்டிருந்தான். எங்கிருந்து எறியப்பட்டன என தெரியாமல், வந்து தன் மூக்கில் ஒட்டிய ஜிகினா பேப்பர்களை
தட்டி விட்டவாறே எரிந்து கொண்டிருந்தான் வெற்றி.
"வெற்றி, என்னா மாஸு பாருடா திலீப்புக்கு.."
"டேய் கொஞ்ச நேரம் பேசாம இரேண்டா..!ஏன் இவ்ளோ எக்ஸைட் ஆகுற..?"
"அங்க பாருடா சண்டையை..என்னாமா அடிக்கிறார்ன்னு.."
"ஏண்டா உயிரை வாங்குற..படத்தை பாறேண்டா"-தலைவலியில் கத்தினான் வெற்றி.
வெற்றி கத்திய காட்டுக் கத்தலில்,அதற்கு மேல் ஒன்றும் பேசாமல்,அமைதியாக படத்தைப் பார்த்தான்.
இரவு 1.30 மணி.படம் முடிந்து வெற்றியும், பாபுவும் வெளியே வந்தார்கள். வெற்றி, தியேட்டர் சிப்பந்தியிடம் டூவீலர் டோக்கனை காட்டியவாறே, தன் யூனிகார்னை ஸ்டார்ட் செய்து உயிரூட்டினான். அந்த காம்ப்ளக்ஸை விட்டு வெளியே வந்தவுடன் பாபு,பில்லியனில் தொற்றிக் கொண்டான்.
பைக்கின் வேகக்குறி முள் 40க்கும் 50க்கும் இடையில் துடித்துக் கொண்டிருந்தது.எங்கே திலீப்பை சிலாகித்தால்,வெற்றி கடுப்பாகிவிடக் கூடமோ..? என்ற தயக்கத்தில் பாபுவும் அமைதியாகவே அமர்ந்து வந்தான். இரவு நேரக் காற்று, இருவர் வாயிலும் மூக்கிலும் புகுந்து கண்கள் வழியே நீராய் வந்து கொண்டிருந்தது.
எதிரில் ,கருப்பா மெரூனாவென அனுமானிக்க முடியாத ஒரு நிறத்தில், ஹோண்டா சிட்டி கார் ஒன்று வந்து கொண்டிருக்க ,தன் வேகத்தை மெல்ல குறைத்தான் வெற்றி.அவர்கள் எதிர்பாராமல், ஹோண்டா சிட்டியும் தன் ஹெட்லைட்டின் வெளிச்சத்தைக் குறைத்து, இவர்களருகில் வந்து நின்றது. அருகில் வந்து நின்றதும் கவனித்தான்.கார் கருப்பு கலர்தான். ஆந்திரா ரெஜிஸ்ட்ரெஷன்.
"தம்பி,அவசரம்..கால்ல அடி பட்டிருக்கு..இஙக பக்கத்துல ஆஸ்பத்திரி எதுனா இருக்கா..?" காரில் இருந்த படியே,"லு" க்களின் வாசனையே இல்லாமல் அட்சர சுத்தமாக தமிழில் பேசினான்.
"இங்க இருந்து ஒரு நாலு கிலோமீட்டர் போனா,பிரியா நர்ஸிங் ஹோம்ன்னு ஒன்னு இருக்கு ஸார்"-வெற்றி.
சொல்லிமுடித்த அடுத்த வினாடி, ஹோண்டா சிட்டி எதிர் திசையில் சீறியது.வெற்றியும் ஆக்ஸிலேட்டரை முறுக்கி,நாற்பதில் சென்று கொண்டிருந்தான்.பாபுவிற்கோ அவன் காரை விட்டு கீழே இறங்கி அட்ரஸ் கேக்காத்தைப் பற்றி கோபம்."அவருக்குத்தான் கால்ல அடி பட்டிருந்தேச்சேடா.." என்று அவனை சாமதனப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான்.
"மச்சி, வண்டியை நிறுத்து.. ஏதோ ஆக்ஸிடெண்ட்டுடா..!"-பாபு.
வேண்டாவெறுப்பாய்,வண்டியை நிறுத்தி விட்டு, கிருத்திகை நேரத்து காக்கைகளாய் கூடியிருந்த மக்களை விலக்கிக் கொண்டே, உள்ளே எட்டிப் பார்த்தான் வெற்றி. முதுகுத்தண்டு சில்லிட்டது. எஸ்..அந்த அட்ரஸ் கேட்டவன்.. காலில் அடிபட்டு உயிரை விட்டிருந்தான்.முகத்திலும் ஆங்காங்கே ரத்தத் துளிகள்..அவனேதான்..!
ஓட்டமும் நடையுமாக,ஒரு வித பயத்துடன்,பைக்கை உயிர்ப்பித்து சென்று கொண்டிருக்க பாபு வெற்றியை முன்பை விட கொஞ்சம் அதிகமாக இறுக்கிப் பிடித்திருந்தான்.இருவருக்கும் எச்சில் வறட்சியால் நாக்கு மேலே ஒட்டிக் கொண்டு வார்த்தை குளறியது. தற்செயலாக, பயத்தில் பாபு திரும்பிப் பார்க்க, பின்னால் அந்த கருப்புக்கலர் ஹோண்டா சிட்டி இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. மங்கலான வெளிச்சத்தில் அந்த காரின் நம்பர் போர்டைப் பார்த்தான்....AP01 BZ 5237.
Next மீட் பண்ணுவோம்....
♠ராஜூ♠


