"மச்சி, சூப்பர் படம்டா.."

"பாபு உற்சாகத்தில் துள்ளினான். "ஏன்டா, இந்த தலைவலியோடு நைட் ஷோ சினிமாவுக்கு வந்தோம்" என வெற்றி மனதில் நொந்து கொண்டான்".

சென்னையின் ஒரு மல்டிபிளக்ஸில், 18 டிகிரி ஏசி குளிரில், மல்லிகைப்பூ ரூம் ஸ்ப்ரே வாசத்திலும் பாபுவின் ஆதர்ச நடிகர் திலீப் நடித்த திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. பாபு, திலீப்பின் ஒவ்வொரு வசன உச்சரிப்பிற்கும் ஒரு விசிலை உதிர்த்துக் கொண்டிருந்தான். எங்கிருந்து எறியப்பட்டன என தெரியாமல், வந்து தன் மூக்கில் ஒட்டிய ஜிகினா பேப்பர்களை
தட்டி விட்டவாறே எரிந்து கொண்டிருந்தான் வெற்றி.

"வெற்றி, என்னா மாஸு பாருடா திலீப்புக்கு.."

"டேய் கொஞ்ச நேரம் பேசாம இரேண்டா..!ஏன் இவ்ளோ எக்ஸைட் ஆகுற..?"

"அங்க பாருடா சண்டையை..என்னாமா அடிக்கிறார்ன்னு.."

"ஏண்டா உயிரை வாங்குற..படத்தை பாறேண்டா"-தலைவலியில் கத்தினான் வெற்றி.

வெற்றி கத்திய காட்டுக் கத்தலில்,அதற்கு மேல் ஒன்றும் பேசாமல்,அமைதியாக படத்தைப் பார்த்தான்.

இரவு 1.30 மணி.படம் முடிந்து வெற்றியும், பாபுவும் வெளியே வந்தார்கள். வெற்றி, தியேட்டர் சிப்பந்தியிடம் டூவீலர் டோக்கனை காட்டியவாறே, தன் யூனிகார்னை ஸ்டார்ட் செய்து உயிரூட்டினான். அந்த காம்ப்ளக்ஸை விட்டு வெளியே வந்தவுடன் பாபு,பில்லியனில் தொற்றிக் கொண்டான்.

பைக்கின் வேகக்குறி முள் 40க்கும் 50க்கும் இடையில் துடித்துக் கொண்டிருந்தது.எங்கே திலீப்பை சிலாகித்தால்,வெற்றி கடுப்பாகிவிடக் கூடமோ..? என்ற தயக்கத்தில் பாபுவும் அமைதியாகவே அமர்ந்து வந்தான். இரவு நேரக் காற்று, இருவர் வாயிலும் மூக்கிலும் புகுந்து கண்கள் வழியே நீராய் வந்து கொண்டிருந்தது.

எதிரில் ,கருப்பா மெரூனாவென அனுமானிக்க முடியாத ஒரு நிறத்தில், ஹோண்டா சிட்டி கார் ஒன்று வந்து கொண்டிருக்க ,தன் வேகத்தை மெல்ல குறைத்தான் வெற்றி.அவர்கள் எதிர்பாராமல், ஹோண்டா சிட்டியும் தன் ஹெட்லைட்டின் வெளிச்ச‌த்தைக் குறைத்து, இவர்களருகில் வந்து நின்றது. அருகில் வந்து நின்றதும் கவனித்தான்.கார் கருப்பு கலர்தான். ஆந்திரா ரெஜிஸ்ட்ரெஷன்.

"தம்பி,அவசரம்..கால்ல அடி பட்டிருக்கு..இஙக பக்கத்துல ஆஸ்பத்திரி எதுனா இருக்கா..?" காரில் இருந்த படியே,"லு" க்களின் வாசனையே இல்லாமல் அட்சர சுத்தமாக தமிழில் பேசினான்.

"இங்க இருந்து ஒரு நாலு கிலோமீட்டர் போனா,பிரியா நர்ஸிங் ஹோம்ன்னு ஒன்னு இருக்கு ஸார்"-வெற்றி.

சொல்லிமுடித்த அடுத்த வினாடி, ஹோண்டா சிட்டி எதிர் திசையில் சீறியது.வெற்றியும் ஆக்ஸிலேட்டரை முறுக்கி,நாற்பதில் சென்று கொண்டிருந்தான்.பாபுவிற்கோ அவன் காரை விட்டு கீழே இறங்கி அட்ரஸ் கேக்காத்தைப் பற்றி கோபம்."அவருக்குத்தான் கால்ல அடி பட்டிருந்தேச்சேடா.." என்று அவனை சாமதனப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான்.

"மச்சி, வண்டியை நிறுத்து.. ஏதோ ஆக்ஸிடெண்ட்டுடா..!"-பாபு.

வேண்டாவெறுப்பாய்,வண்டியை நிறுத்தி விட்டு, கிருத்திகை நேரத்து காக்கைகளாய் கூடியிருந்த மக்களை விலக்கிக் கொண்டே, உள்ளே எட்டிப் பார்த்தான் வெற்றி. முதுகுத்தண்டு சில்லிட்டது. எஸ்..அந்த அட்ரஸ் கேட்டவன்.. காலில் அடிபட்டு உயிரை விட்டிருந்தான்.முகத்திலும் ஆங்காங்கே ரத்தத் துளிகள்..அவனேதான்..!

ஓட்டமும் நடையுமாக‌,ஒரு வித பயத்துடன்,பைக்கை உயிர்ப்பித்து சென்று கொண்டிருக்க பாபு வெற்றியை முன்பை விட கொஞ்சம் அதிகமாக‌ இறுக்கிப் பிடித்திருந்தான்.இருவருக்கும் எச்சில் வறட்சியால் நாக்கு மேலே ஒட்டிக் கொண்டு வார்த்தை குளறியது. தற்செயலாக, பயத்தில் பாபு திரும்பிப் பார்க்க, பின்னால் அந்த கருப்புக்கலர் ஹோண்டா சிட்டி இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. மங்கலான வெளிச்சத்தில் அந்த காரின் நம்பர் போர்டைப் பார்த்தான்....AP01 BZ 5237.

Next மீட் பண்ணுவோம்....
♠ராஜூ♠
Labels , 18 பின்னூட்டங்கள் | | edit post
முடிவா என்ன சொல்றீங் 
வாசு...என் நண்பன், தோழன்,சகா,மச்சி, மாமா, மாப்ள இத்யாதி,இத்யாதிக்கள். நானும் அவனுக்கு அப்படித்தான்.மதுரையில் நானும் அவனும் சேர்ந்து சுற்றாத இடங்களே இல்லை. எங்கள் கால்படாத இடங்கள் புண்ணியம் செய்தவை என்றுதான் எங்கள் ஏரியாவாசிகள் சொல்வார்கள். நானில்லாமல் அவனையோ அவனில்லாமல் என்னையோ பார்ப்பது எஸ் பிக்ஸர்ஸ் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது போல கடினமான காரியம். பழங்காநத்தம் ராஜா தியேட்டரிலும் வில்லாபுரம் மது தியேட்டரிலும் ஏதாவது ஆண்டுவிழா நடத்தினால் எங்களிருவரைத்தான் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க வேண்டும். காரணம், நாங்கள் அதிகம் மலையாள படங்கள் பார்ப்பதால்தான் அந்த தியேட்டர்களின் வருமானம் உயர்ந்திருக்க வேண்டும். எங்கள் ஏரியாவில் எந்தவொரு குற்றம் நடந்தாலும் அவன்தான் முதற்குற்றவாளி.அடுத்தது அடியேன். என் வாழ்வில் மறக்கவே முடியாதவன் அவன்.எனக்கு முதன் முதலில் ஜெயிலை காட்டியவன்.என்னை விட இரண்டு வயது அதிகமாயிருந்தாலும் நான் அவனை "வாடா போடா" என்று அழைக்குமளவிற்கு நெருக்கம்.

எங்கள் செட்டிலேயே வாசு கொஞ்சம் அதிகமான ரசனைக்காரன். அவன் சட்டை போடுவதிலிருந்து சரக்குக்கு சைட்டிஷ் தேர்ந்தெடுப்ப‌து வரை அவனுடைய ரசனை அபாரமாக இருக்கும். பெண்கள் விஷயத்தில் மனுசன் கில்லாடி. எந்த நிறப் பெண்ணுக்கு எந்த நிற உடை கச்சிதமாக இருக்கும் என்பதைப் பற்றி ஒரு ஆராய்ச்சியே நடத்தி புரிய வைப்பான். நண்பர்கள், தங்களுடைய காதலிக்கு உடை வாங்கக் கூட வாசுவிடம்தான் ஆலோசனை கேட்பார்கள். அவனும் "சுடிதார் வேணாம் மச்சி, பாட்டியாலாதான்டா இப்போ ஃபேமஸ், அதுவும் உன் ஆளு கலருக்கு வெள்ளை கலர்ல கருப்பு புள்ளி வச்ச டாப்ஸும், கருப்பு பாட்டமும் வாங்கிக் குடுத்து பாரு....ஜாரி அப்புடியே வால்ட்டுதான்" என ஒரு சின்ன பிரசங்கமே செய்து முடிப்பான். நேற்றைக்கு முந்திய நாள் செருப்புக்கடையில் போட்டிருந்த பெண்ணைக் கூட, "மச்சி, அவளுக்கு லோஹிப் கட்டவே தெரியலடா" என்று அங்கலாய்த்து சலித்துக் கொள்வான்.

மெகா சீரியலில் வரும் பெண்களைக் கூட ஒன்றையும் விட மாட்டான். "இந்த ஃப்ரேம்ல மஞ்சள் சேலைதான்டா எடுக்கும்" என்று வழக்கம் போல கமெண்ட் பறக்கும். நமீதா ஃப்ரேமில் வந்தால், ஓவர்லேப்பாகி அவுட் ஆஃப் போகஸில் பின்னால் ஆடும் டான்ஸர்களைக்கூட "ச்சே...32-26-34 டா" என்பான். அந்தளவுக்கு துல்லியமாக கவனிப்பான்."ஃபேஸன்" என்று அங்கிலத்தில் எழுதிக்காட்டினால் அதை "பாய்சன்" என படிக்குமளவுக்கு அறிவாளி நம்மவன். பத்தாம் வகுப்பில் மூன்று தடவை கோட்டடித்துத்தான் மேற்கூறிய அனைத்து லீலைகளையும் நடத்தி வந்தான். காலப்போக்கில் நாங்கள் அந்த ஏரியாவை விட்டு, வேறொரு ஏரியாவிலுரிந்து குடி பெயர்ந்து விட்டதால்,அவனுடனான‌ தொடர்பு விட்டுப் போயிற்று.

சென்ற மாதம் நண்பனொருவனின் தங்கை கல்யாணத்தில்தான் அந்த முன்வழுக்கை விழுந்த நபரைப் பார்த்தேன்.ஆம் நீங்கள் நினைப்பது போல, வாசுவேதான். பரஸ்பர டெம்ப்ளேட் விசாரிப்புகளுக்குப் பிறகு, "என்னடா மச்சி பண்ற..?" என்றேன். பேச்சி சுவாரசியத்திலும், கெட்டிமேள நேர களேபரத்திலும் அவன் கொடுத்த விசிட்டிங் கார்டை சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன். மனைவி சட்டையை துவைக்கும் போது, எடுத்துக் கொடுத்த கார்டை வாங்கி கவனித்தேன். அதில் "Fine Tailers-Ladies Specalist" என்ற சிவப்பு நிற எழுத்துக்கள்.அந்த‌ அட்டையின் வலது ஓரம் "Properiter: R.Vasudevan" என்ற ஜிகினா எழுத்துக்களால் என்னைப் பார்த்து சிரித்தது.


Next மீட் பண்ணுவோம்.
♠ராஜூ♠
Labels , 23 பின்னூட்டங்கள் | | edit post
முடிவா என்ன சொல்றீங் 
"வணக்கம் அண்ணே..!"

"தயவு செய்து என்னை அண்ணன் என்று அழைக்க வேண்டாம். பெயர் சொல்லி அழையுங்களேன்"

"ஓ.கே. வால்."
"பேட்டியை ஆரம்பிக்கலாமா..?"

"ம்ம்"

கடவுள் இருக்காரா இல்லையா சார்..?

கடவுள் என்று நீங்கள் குறிப்பிடும் அந்த நபரும் நானும் ஒரு நாள் சாப்பிடலாம் என்று ஒரு தடவை ஈரோட்டில் ஒரு உணவகத்திற்கு சென்றோம்.காசு பத்தல. நானும் அந்தாளும் பாதிப்பாதி பார்ட்னர்ஷிப் போட்டு சாப்பிட‌லாம்ன்னு சொல்லி வாங்கிவி ட்டு, எனக்கு ஒரு பொட்டு கூட குடுக்காம அந்தாளே சாப்பிட்டு விட்டு மறைந்து விட்டான். அப்போதுதான் தோன்றியது. உலகத்தில் எல்லாமே மாயை.அப்படியென்று. கடவுள் இல்லையென்று. அதனாலேயே இன்று வரை அதை வலியுறுத்தியும் சில நேரங்களில் வலி "ஊத்தியும் " வருகின்றேன்.

சமீப காலமாக, நீங்கள் 'பீர்' அடிப்பதில்லையென, மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸடாண்டிலிருந்து ஒரு செய்தி குறிப்பு தெரிவிக்கிறதே, அதைப் பற்றி..?

ஆம்..உண்மைதான். இர‌ண்டு மாதத்திற்குக்கு முன்னாடி கூட 'பீர்' அடிச்சு ஒரே பிரச்சனை. அப்பறம் ஜெய்ஹிந்துபுரத்துல ஒரு டாக்டர் கிட்ட காட்டி, அங்க ஒரு ரெண்டு நாளு பட்டறையப் போட்டும் சரியாகல.



சார்,எதைப் பற்றி கேட்டாலும் சரக்கு, சாராயத்த வச்சே பதில் சொல்றீங்களே, ஏன்..?

அது அப்டித்தான்..! நீ கேள்வி கேக்குற வேலைய மட்டும் பாருடா @#$%&*&^%.

சரி, நீங்க அப்டி சொன்னதால, இந்த கேள்வி. நீங்க இதுவரைக்கும் அடிக்காத சரக்குன்னு ஏதாவது இருக்கா சார்..?

ம்ம்..இருக்கு. 'சமாக்'ன்னு ஒன்னு. இதுவரைக்கும் நான் அடிச்சதே இல்லை. ஏன் பார்த்த‌து கூட இல்லை. நண்ப‌ர் ஒருத்தர்" புனே" வந்தா, வாங்கித் தர்றதாக சொல்லியிருக்கிறார். அப்படி அவர் வாங்கித் தந்தால் அன்போடு குடிப்பேன். (அது பதிவர் அன்பு அல்ல.)

"யோகி" படம் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்..?

அது தமிழ் படமா..? நான் சமீப காலமாக தமிழ்ப் படங்கள் பார்ப்பதில்லை. பெரும்பாலும் ஹிப்ரு, உருது மற்றும் அரபி மொழிப் படங்கள்தான் பார்க்கின்றேன். ஹிப்ரு மொழி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றது. அரபி மொழி கூட தற்போது உருமாற்றமடைந்து உருது மொழியாகி விடும் அபாயமும் இங்கே நிலவி வருகின்றது. அரபு நாடுகளின் ஆட்சி மொழியாக உருது இருப்பதுதான் எனக்கு சற்றே ஆறுதல் தரும் விடயம்.

சரி,அந்த படத்தைப் பற்றி மேலோட்டமாக‌ உங்கள் கருத்து என்ன..?

ம்ம்.. அந்த படத்தில் அமீர் என்றொரு இயக்குநர் நடித்திருப்பதாக நண்பர் த‌ண்டோரா ஃபோன் செய்து கூறினார். படம் மிக மொக்கையாக உள்ளதாம். அதே கருத்தைத்தான் நண்பர் ர‌மேஷ் வைத்யாவும் வலியுறுத்தினார். படம் பார்க்க வேண்டும்.

தங்கள் நண்பர் "சொள் அலகன்" பற்றி..?

நான் பலகாலமாக சொல்லி வரும் அதே பழைய பதில்தான். " நான் அந்தளவுக்கு வொர்த் இல்லங்க."

முதலாளித்துவம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்..?

அதப் பத்தி நீங்க எங்க முதலாளிக்கிட்டதான் கேக்கணும். ஒன் நிமிட் பிளீஸ். கார்த்திக்கிற்கு ஃபோன் போட்டு கொடுக்கிறேன்.

உங்களுக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்..!


"எனக்கு பிடித்தவர் மற்றும் ரொம்ப பிடித்தவர்........"

"சார். நான் பிடித்தவர்..பிடிக்காதவர் பற்றித்தான் கேட்டேன்"

"எனக்கு பிடிக்காதவர்கள் என யாருமே கிடையாது, நமக்குள்ளயே பிடிக்கலைன்னு சொல்லி புதிய அரசியலுக்கு வழி வகுக்க காரணமும் ஆகிவிடக்கூடாது!"

"அடங்கப்பா, இது உலக நடிப்புடா சாமீ..(மனதிற்குள்).

"சாரி சார்.,இந்த கேள்வி ஸ்கிப்..அடுத்த கேள்வி."

நீங்கள் கடவுளைப் பற்றி சொல்லும் ஒரு கதை, பதிவுலகில் ரொம்ப பிரசித்தமாமே. கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன்.!


இந்த உலகமே இருட்டா இருந்துச்சாம்! வெளிச்சமே இல்லையாம்! கடவுள்னு ஒருத்தர் தனியா உட்காந்துகிட்டு அவருக்கு அவரே பேன் பார்த்துகிட்டு இருந்தாராம்! திடிர்னு ஒருநாள் நமக்கு எதாவது சக்தி இருக்கான்னு செக் பண்ண டிஷ்னு ஒரு சவுண்டு விட பூமி வந்துச்சாம்! ஆனா பூமி வந்துச்சா வரலையான்னு கடவுளுக்கு தெரியல , அங்க தான் இருட்டா இருக்கே, அதனால சூரியன்னு ஒண்ணு படைச்சாராம்!, அப்புறம் அப்படியே ரொம்ப நாள் போச்சாம்! .........

இப்படியாக அவர் ஆ'ரம்பித்த' கதையை பாதி கேட்டவுடனேயே, அந்த நிருபர் சித்தம் கலங்கி பித்தம் பிடித்து ஓடியவர்தான். இன்னும் வீடு திரும்பவில்லை.கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.

டிஸ்கி: வாலின் ஃபோட்டோ கிடைக்கவில்லை. அதனால்தான் அவசரத்திற்கு மேலே இருக்கும் படம். அந்த படத்தில் காதோரத்தில், கொஞ்சம் வெள்ளைமுடி வச்சு பார்த்தீங்கன்னா வால் பையன் மாதிரியே இருக்குல்ல..!

Next மீட் பண்ணுவோம்....
♠ராஜூ♠
ஆனந்த விகடனில் "இன்பாக்ஸ்" பகுதி யாருப்பா எழுதுறா..? தகவல்கள் எல்லாமே ஏற்கனவே இணையம் வாயிலாக தெரிந்திருந்தாலும் அதற்கு அவர்கள் கொடுக்கும் கமெண்ட்ஸ் அசத்தல் ரகம்.அதுவும் போன‌ வாரம் (நினைக்கிறேன்) உதயநிதி,தயாநிதி,அருள்நிதி பற்றிய செய்திக்கு "ஆ..ஊனா கூட்டம் கூட்டமா, கொடியப் புடிச்சுக்கிட்டு கிளம்பிறாய்ங்கே..!" என்ற கமெண்ட்க்கு, அதே ஸ்லாங்கில் படித்து விட்டு, 2 நிமிஷம் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதே மாதிரி "வாரணம் ஆயிரம்" ரிலீஸான சமயத்தில் தயாநிதி அழகிரி படத்தைப் போட்டு "மதுரைல ஆயிரம் நூறைத் தாண்டும்ல" என எழுதியிருந்த கமெண்ட்டும் ரசிக்க வைத்தது.ஆ.வி.யில் இன்னோர் பிடித்தமானவர் "லூசுப்பையன்" . அவரது மொழிக்கு ஒரு அகராதியே போடலாம்.நண்பர் ஊர்சுற்றி போட்டிருக்கிறார். அதற்கு இணையாக இந்தப் பக்கம் அவ்வப்போது ஜூ.வியில் "விடாது நர்சிம்". (எங்க தலைவரே கொஞ்ச நாளா ஆளையே காணோம்..?)

***************************************************************************

மறக்க முடியுமா..? நவம்பர் 26. அதை நினைவு கூறும் வகையில்,"IDEA GROUP" நவம்பர் 26ம் தேதியன்று,குறிப்பிட்ட ஒரு மணி நேரம் வாடிக்கையாளர்கள் பேசிய‌தால் தனக்கு வந்த‌ தொகையை, தேசியப் பாதுகாப்புப் படைக்கு பாதுகாப்புச் சாதானங்கள் வாங்க நன்கொடையாகத் தந்திருக்கிறதாம்..இதன் பிண்ணனியில் அரசியல், கறுப்புப்பணம், விளம்பரங்கள் என எத்தனை மண்ணாங்கட்டிகள் இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி "ஆதித்யா பிர்லா குரூப்"புக்கு ஒரு ராயல் சல்யூட்..! கஸாப் சிறையில் இன்டர்நெட் வசதி கேட்கிறானா(ரா)ம்.அதிதி தேவோ பவ..!

***************************************************************************

வேட்டைக்காரன் படத்துல "புலி உறுமுது" பாட்டு கேட்கும்போதெல்லாம் இரத்த அழுத்தம் கொஞ்சம் எகிறுவதை உணர முடிகின்றது.அந்தளவுக்கு விஜய் ஆண்டனி அடித்திருக்கிறார். விஜயின் முக த்தில் ஒப்பனையாளரின் ஓயாத‌ உழைப்பு தெரிகின்றது.இதே ரேஞ்சில் (இதை விட) "அசல்" இன்ட்ரோ பாட்டும் தூக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வருவதை தடுக்க முடியவில்லை. வரிகளைப் பற்றி கவலையில்லை. வைரமுத்துவின் வைர வரிகள் நிச்சயம் இரு(னி)க்கும். படத்தில் எங்க‌ "தல"க்கு "டான்" கேரக்டர் வேற. அதனால் ஒரு அதிரும் பாட்டு நிச்சயம். பிளிஸ்..தல ரசிகர்களோட தேசியகீதத்தை கவுத்துராதீங்க பரத்வாஜ் பாஸ்..!

***************************************************************************

ஹமாம் விளம்பரம் பார்த்திருப்பீர்கள். ஒரு அங்கிள் (வாலி படத்தில் சிம்ரனுக்கு அப்பாவாக வருவார்)சொல்லுவார் "ஆட்டோல, அந்த பசங்களோட ஒட்டிண்டு போறாளே, அதுனால வரது இந்த இன்ஃபெக்சன்"னு.இன்றளவில் 100% சாதி, மதங்கள் பார்க்காமல் பழகுபவர்கள் சிறு வாண்டுகள்தான். அங்கயும் போயி இப்புடி பிரச்சாரம் பண்றீங்களேடா..! இதுக்கு அசினோட "அம்மாடி..ஆத்தாடி"யும் வசனங்களே இல்லாத "ஆக்ஸ்" விளம்பரங்களும் எவ்வளவோ மேல். போங்கடா நீங்களும் உங்க "சுத்தமான" சோப்பும்.

***************************************************************************

காஞ்சிபுரம் சாமியாரின் லீலைகள் பற்றி படித்திருப்பீர்கள். நானும் ஏதோ ஒரு வலைப்பூவில் படிக்கும்போது அதில் கேட்ட ஒரு கேள்வி என்னை கண்ணைக் கட்ட வைத்துவிட்டது. நீங்களே பாருங்க அந்த கேள்வியை..

"கடவுள்தான் தூண்லயும் இருக்கார். துரும்புலயும் இருக்காரே.. அப்பறம் எங்க தான் போயி, என்னத்தைத்தான் பண்றது..?"

எனி கமெண்ட்ஸ்...?!?!?
:-)

***************************************************************************

ஒரு தத்துவம்.
கண்ணா, காதல்ன்றது காக்காப்பீ மாதிரி. உன் தலைல விழுகும் போது அதை துடைச்சு போடுறதும் தொட்டு நக்குறதும் உன் கையிலதான் இருக்கு.

Next மீட் பண்ணுவோம்....
♠ராஜூ♠
திருநெல்வேலியிலருந்து, ஒரு 50 கிமீ தூரத்துல இருக்குங்க எங்க ஊரு. பேரு வெயிலடிச்சாம்பட்டி. எங்க ஊருல இருக்குறாங்கல்லாம் ஒரு மாதிரி..ஆமாங்க இந்த ராஜேஷ்குமார் நாவல்ல, கோயம்புத்தூர்காரங்கல்லாம் "வாங்..போங்.."ன்னு பேசமாட்டாங்களே..அதே மாதிரிதான் நாங்களும். "வாலே..போலே"ன்னு பேச மாட்டோம். அதுனால நாங்க திருநெல்வேலிக்காரவுக இல்லைன்னு ஆகிற முடியுமா..? இந்த மாதிரி அறிவாளித்தனமா யோசிக்கிற அறிவுஜீவிகள் யாரையுமே எங்க ஊர்ல நான் பார்த்ததே கிடையாது. ஆனா, முதல்முறையா அப்பிடி ஒரு ஆளை நான் காலையிலே, அவுட்சைடு போகும்போது சந்திச்சேன். அவரு பேரு முருகன். மேல இருக்குற ராஜேஷ்குமார் மேட்டர் கூட அவர் சொன்னதுதான். வழக்கமா நானும் அவரும் ஒன்னாதான் அவுட்சைடு போவோம். அங்க போயி குத்த வச்சுட்டு, அந்தாளு ஆத்து ஆத்துன்னு ஆத்துவாரு சொற்பொழிவு. நான் வாயைப் பாத்துக்கிட்டே, அய்யய்யோ, "இந்தாளு எப்படா பேச்சை முடிப்பாரு.. நமக்கு வேற காயுதே"ன்னு ஒக்காந்துட்டு இருப்பேன்.

சாயங்காலம் கரெக்டா ஆறு மணிக்கு, எங்க ஊரு மணி டீக்கடைக்கு போனோம்ன்னா, நம்ம முருகன் அன்ணே அங்க ஒக்காந்துக்கிட்டு இருப்பாரு. முந்தாநேத்து மாலை மலரைப் பார்த்துட்டு நம்மாளு ,ஒபாமாவுக்கும் ஒசாமாவுக்கும் எப்புடி பிரச்சனைய தீர்க்கலாம்ன்னு எங்க ஊரு பென்சன் கேஸுகளுக்கு கிளாஸ் எடுத்துட்டு இருப்பாரு. சின்னவய்சுலேர்ந்தே, நம்ம முருகன் அண்ணனுக்கு சினிமா அறிவு கொஞ்சம் ஜாஸ்தி. அவரோட லட்சியமே ஒரு பெரிய "டயரடக்கர்" ஆகுறதுதான்.ஆமாங்க..அவருக்கு இயக்குனர், டைரக்டர், நெறியாளுனர் இப்புடியெல்லாம் சொன்னா பிடிக்காது. டயரடக்கர்ன்னுதான் சொல்லனும்.ஒரு படத்தை டக்கரா ஓ ட்டுறதுக்கு டயரு மாதிரி ஓயாம உழைக்கிறவன்தான்டா "டயரடக்கர்"ன்னு செம மொக்கையா அதுக்கு விளக்கம் வேற கொடுப்பாரு. நம்ம அண்ணன் ஒரு படத்தைக் கூட பார்க்காம விடவே மாட்டரு. அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஜப்பான், கொரியா, தைவான், செக்கோஸ்லேவாகியா, உஸ்பெஸ்கிஸ்தான், கஸகஸ்தான்னு ஒரு நாட்டையும் விடாம, அத்தனை படத்தையும், புரியுதோ இல்லையோ மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டே பார்த்து தொலைஞ்சுருவாரு. ஆனா அவருக்கு அந்த படங்களோட டிவிடி எல்லாம், எங்கருந்து கிடைக்குதுன்னு இன்னைய தேதி வரைக்கும் யாருக்குமே எங்க ஊருல தெரியாது.

படம் பார்த்து முடிச்சுட்டு, இந்த கட்டைவிரலையும் ஆட்காட்டி விரலையும் ''னா மாதிரி வச்சுக்கிட்டு ஆகாயத்தை பார்த்து ஒரு ஆட்டு ஆட்டிக்கிடே "இந்த படத்துல பேசிக்கே சரியில்லைடா தம்பி"ன்னு சொல்லுவாரே பார்க்கனும். அடா அடா அடா அதைப் பார்க்குறதுக்கு ஆயிரம் கண்ணு வேணும்யா..! அதே மாதிரி ஒரு படத்தோட டிரைலரைப் பார்த்துட்டே, அது இந்த நாட்டோட படம்ன்னு கரெக்டா சொல்லிருவாரு. நானெல்லாம் அவரு பேசுறதுல ஒரு அஞ்சு பர்சென்ட்டை மட்டுமே எங்க காலேஜுல பேசி "அறிவுஜீவி" பட்டம் வாங்கியிருக்கேன். அதுக்காகவே நான் அவரோட சேர்ந்து சுத்துவேன்.அப்பறம் அண்ணன் அடிக்கடி "சேகர் கம்மூலா"ன்னு ஒரு வார்த்தை சொல்லிக்கிட்டே இருப்பாரு. நானும் அது என்னான்னே தெரியாமயே தலையாட்டுவேன். போன மாசம்தான் எனக்கு அவரு ஒரு தெலுங்குப்பட டைரக்டர்ன்னே தெரியும். அந்தளவுக்கு அண்ணன் அப்டூடேட்டா இருப்பார்.

முன்னமே சொன்ன மாதிரி,அண்ணனுக்கு வாழ்க்கைல ஒரு பெரிய டயரடக்கரா ஆகணும்ன்னு லட்சியம் இருந்ததால,அவரோட பெயரை "அயர்ன்ஸ்கிரீன் ஆஃப்ஸ்மித்" அப்டின்னு மாத்திக்கிட்டாரு. நான் அந்த பெயருக்கு விளக்கம் கேட்டேன். எதிர்காலத்துல அகிராகுரோசோவாக்கு இணையா வரனும்ன்னா, இப்பிடித்தாண்டா தம்பி பேர் வச்சுக்கனும்ன்னு சொன்னாரு. நானும் மரியாதைக்கு "வரலாறு ரொம்ப முக்கியம்ண்ணே" அப்பிடின்னு சொல்லி வசேன். அப்பப்போ அண்ணன் அடிக்கடி, அவரு வீட்டுத் திண்ணைல ஒரு பேப்பர் பேப்பரா எழுதிக்கிடே இருப்பாரு. கேட்டா ,அடுத்த நூற்றாண்டோட இணையற்ற பாடலாசிரியர் நான்தாண்டான்னு சொல்லுவாரு.ஒரு நாள் நான் காலேஜுக்கு போகும்போது கையில பெட்டியோட நம்ம முருகன் அண்ணன் பஸ்ஸ்டாப்புல, ஒக்காந்து இருந்தாரு. எங்க பக்கத்துல போனா "பஸ்ஸ்டாப்பில் ஓர் ஆப்பு"ன்னு கதை சொல்லுவாரோன்னு பயந்துக்கிட்டே, போனேன். அண்ணன் சினிமாவுல சேருறதுக்காக, சென்னை போகப் போறேன்னு சொன்னார். நானும் வாழ்த்தி (?) அனுப்பி வச்சேன்.

போன மாசம், ஊருக்கு போனப்போ நம்ம முருகன் அண்ணனைப் பத்தி விசாரிச்சேன். எல்லாரும் ஒரு மாதிரியா சிரிச்சுக்கிட்டே, "யாரு நம்ம குனாகானா முருகனான்னு" கேட்டாங்க. நான் ஒன்னுமே புரியாம,இல்லண்ணே சென்னை போனாரே நம்ம டயரடக்கர். முருகன்"னு சொன்னேன். அட அவன்தான்யா..இப்போ குனாகானா முருகன்னு பேரை மாத்திக்கிட்டு, ஏதோ கதை எழுதிட்டு இருக்கான்னு சொன்னாங்க. போயி பார்த்தேன் அண்ணனை.அதே சொற்பொழிவு. ஆனால் இந்த தடவை , ஒரு எழுத்தாளரைப் பத்தி, "இவரு பேஸிக்கே சரியில்லைடா தம்பி"ன்னு சொன்னாரே பர்க்கனும். ரைட்டு..இந்த வருஷம் எழுத்தாளர் அவதாரம் போலன்னு நெனைச்சுக்கிட்டே அவரு பக்கத்துலஒக்காந்து ஒரு அரை மணி நேரம் கழிச்சு அது என்னண்ணே "குனாகானா முருகன்"னு கேட்டேன். அதுதாண்டா தம்பி "குவிக் கன் முருகன்" என்னோட புனைப் பெயரோட சுருக்கம்ன்னார். எனக்கு அப்புடியே கண்ணைக் கட்டிருச்சு. இன்னும் ஒரு வாரத்துல www.quickgunmurugan.com அப்பிடின்னு வெப்சைட்டும் ஆரம்பிக்கப் போறாராம் . இப்போக்கூட‌, "சிங்கீதம் சீனிவாசராவ் முதல் கிம்டுகிக் வரை" அப்பிடின்னு ஒரு புத்தகம் எழுதுக்கிட்டு இருக்குறதா நம்ம அண்ணன் சொன்னார். அநேகமா நடக்கப் போற சென்னை புத்தக கண்காட்சியில அவரோட படைப்புகளை நீங்கள் பார்க்க நேரிடலாம்.



டிஸ்கி:
அட போங்கப்பா..இதுக்கெல்லாம் டிஸ்கி போட நான் என்ன இரும்புத்திரை அரவிந்தா..?

Next மீட் பண்ணுவோம்....
♠ராஜூ♠



நம்மக்கிட்ட கொஞ்சம் அதிகமா எதிர்பாக்குறாய்ங்களோ...! சட்டில இருந்தாத்தான அகப்பைல வரும்.





திருச்செந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் ல.தி.மு.க. வேட்பாளரை படத்தில் காணலாம்.
-நமது சிரிப்பு நிருபர்.







மேலே படத்தில் இருக்கும் "வாலிபரைத்தான்" ரேமென்ஸ் நிறுவனம் தன்னுடைய மாடலாக அறிவித்துள்ளது.

-நமது சிரிப்பு நிருபர்.



ஏன் கேமராமேன் ஓடுறாரு..கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ..!




ஹி..ஹி..ஒண்ணுமில்லை.சன் டிவியில நியூஸ ரீடர் வேலைக்கு அப்ளை பண்ணியிருக்கேன்.



சீக்கிரம் எடுய்யா..! டிரஸுக்கு ஓனர் வந்துரப்போறாரு..!

படத்தை கிளிக்கி பெரிதாக காணலாம்.
(ரொம்ப முக்கியம்ம்ம்..!)


Image Courtesy: Mr.குசும்பன்.

டிஸ்கி: H.O.D.கோவிச்சுக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்.....!

Next மீட் பண்ணுவோம்....
♠ராஜூ♠
ஸ்டார் வேல்யூ இல்லாமலேயே, "பாரம்", "வீடோடிகள்" என்று பாக்ஸ் ஆபீஸில் எகிற, அந்த காய்ச்சலால்சின்ன சின்ன பட்ஜெட்டில் படங்கள் குவிந்து கோடம்பாக்கத்தை திணறடிக்க, நம் பல்லி சண்டை போடும் நாயகர்கள் பயங்கர அப்சட்.. கூடுகிறது ஜமா.

ம‌ஜித்: என்னாப்பா,"ப‌சல்" கறையேறுமான்னே தெரியல."சோதி கிளையாடு"பார்த்துட்டு பாதில எந்திரிச்சு "ஆளை விட்டாப் போதும்டா சாமியோவ்"ன்னு ஓடி வந்துட்டேன்.., அங்க எப்புடி ராசா..?

குஜய்: எனக்கும்தான் பாஸு."சாட்டைக்காரன்" பார்த்தாக்கா,என்னோட பழைய படத்தை நானே நாலாவது தடவை பார்க்குற மாதிரி ஃபீலீங். இந்த "ஊரரசு" வேற கால்ஷீட் கேக்குறாரு.எஸ்.எம்.எஸ் தொல்லை பத்தலைன்னு எங்க டாடி வேற,டார்ச்சர் கொடுக்குறாரு.அடுத்த வாரம் "கோபால் பூந்தி" யோட மீட்டிங். அதுக்கடுத்த வாரம் கட்சிக்கொடி டிஸைனிங்,கட்சி பேரு டிஷ்கஷன்னு ஏகப்பட்ட ஷெட்யூல்ஸ்.

ம‌ஜித்: உனக்கென்னாப்பா, ப‌ன் டிவி இருக்குல்ல. அப்பறமென்ன ஹிட்டுதான..?

குஜய்: அங்க மட்டும் என்ன வாழுதாம்.."மாந்தி தியேட்டர்"ல ப‌சல் ஒரு வருஷம் கன்ஃபார்ம்தான..?

விவாதம் சூடு பிடிக்க,அந்த டிம்லைட் ஹாலிலும் கூலிங்கிளாஸுடன்,"பஷ்வின்" வர...,

ம‌ஜித்: வாங்க ஜி,என்ன விமலோட டிஷ்கஷன் முடிஞ்சுருச்சா..?

பஷ்வின்: அட, நீ வேற சும்மா இருப்பா..! எடுத்த "ச‌ந்தஊலா"வுக்கே வழியக் காணோம். இதுல விமல் வேறயா..! கூட்டாளி "வேரனுக்கும்" ம‌க்கிஷம் ஊத்திக்கிச்சு. அந்தாளு வேற "கூலு ஜிகேந்திரா" ரேஞ்சுக்கு ஒரு "நாங்கள் சுட்டவை" மாதிரி படம் எடுத்துட்டுதான் ஓய்வேன்னு சொல்லுறாரு.

குஜய்: அட,ஆமாங்க, இந்த "கார்யா"கட்டங்கட்டி அடிச்சுட்டுருக்காப்ல.ச‌தயநிதி கூட இன்னோரு படமாம். ச‌மீரும் "போகி"ன்னு "ம‌ப்ரமணிய கவா" கூட "ம‌னேகன்" சகிதமா கூட கை கோர்த்துட்டாப்ல. இந்த "வ‌ம்பு" எங்கயா ஆளையே காணோம்ன்னு அவருக்கு ரிங்கடிக்க..

எதிர்முனையில்,ண்ணா..சொல்லுங்ண்ணா..இங்க "ம‌ண்ணைத் தாண்டி போவாயா"ல பிஸிங்ண்ணா.இந்த "ஃபோர்ஷா" பொண்ணு வேற 12 மணிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புதுங்ண்ணா.அடுத்த வாரம் சிங்கப்பூர்ல ஸ்டார் நைட்டுங்ண்ணா."சிரபுபாவா" டான்ஸ் ஆடுறாருங்ண்ணா."ச‌யன்பீரா" பக்கத்துல நமக்கு ஸீட்டுங்ண்ணா. அப்டியே அங்க இருந்து "ம‌ண்ணைத் தாண்டி போவாயா" சூட்டிங்குக்கு பேக் டு அமெரிக்காங்ன்ணா..!

"டேய்..என்னயவே ண்ணா..ண்ணான்னு கிண்டலடிக்கிறயான்னு" டென்ஷனாகி செல்ஃபோனை உடைக்கிறார் குஜய்.ம‌ஜித் அப்படியே அவரை கிலியடித்துப் பார்த்துக் கொண்டிருக்க, ஸ்பாட்டில் ம‌ஷாலும் ஜ‌க்ரமும் ஆஜர்.

ம‌ஜித்:என்னாப்பா ம‌ஷாலு..? "பீலா"வோட படம் பண்றியாமே..அந்தாளு டேஞ்சரான‌ ஆளுய்யா.. பார்த்து இருந்துக்க.ஆமா சொல்லிப்புட்டேன்.

ம‌ஷாலு:ஆமாண்ணே, ஏதோ கதையாம். அதுல இருக்குற மாதிரிதான் நடிக்கணுமாம்.ஒரே டார்ச்சர்ன்ணே. எங்க அண்ணன் வேற அந்த படம் ஒடலைன்னா, நஷ்ட ஈடு கேட்டு கேஸ் போடுவேன்னு சொல்லிட்டான். என்ன கொடுமை சார் இது..?!?

இது பரவாயில்லை.இந்த "காசிபுவ‌ணேசன்" என்னைய வச்சு எடுத்த "நொந்தசாமி" படம் குழ‌ந்தைகளுக்கான படமாம். எனக்கே இப்பதான் தெரியும். இன்னோர் கதை "ராமசாமி"ன்னு இருக்காம். கால்ஷீட் கேட்டு நேத்து நைட்டெல்லாம் ஒரே அழுகாச்சி என ஜ‌க்ரம் பேசிக் கொண்டிருக்க, அவருடைய செல்ஃபோன் அலறுகிறது. போனை எடுத்து "ஹாங் ஜி, போலியே ஜி" என்று பேசிவிட்டு, "ஸாரி.."பாவண்" ஹிந்தி வெர்ஷனுக்கு "ப‌பிஷேக் அச்சன்" கூட சூட்டிங்.!" என்று மற்றவர் வயிற்றில் புளியைக் கறைத்து விட்டு அப்பீட்டாகிறார்.

சற்று தூரத்தில், ஊளையுடன் கலந்த "சம்.ஆர்.சாதா" வாய்ஸில் "அடப்பாவிகளா, அடப்பாவிகளா" என்ற முனங்கலுடன் , "கவேக்" வருகிறார்.

மஷால்: வாங்கண்ணெ, நல்லா இருக்கீங்களா..?ஹும்.. "கல்லமே"ல பார்த்தது.

கவேக்: ஏன்யா சொல்ல மாட்ட..உனக்கு உங்க அண்ணன் இருக்காப்ல. எனக்கு யாரு இருக்கா..? நைட்டு தூங்கும் போது கன‌வுல "பேனா" வந்து கண்ணக் குத்துதுயா..!

மஜித்: ம்ம்.இதுக்குத்தான் அதிகமா பேஸக் கூடாதுன்றது.

கவேக்: ஆமா பாஸு.. கஜினி, விமல் எல்லாம் மைக்கப் புடிச்சவுடனே ஏன் குட்டிக்கதை சொல்ல ஆரம்பிக்கிறாங்கன்னு இப்பதான் புரியுது.இப்பல்லாம் யாராச்சும் ஜிப்பா போட்டுக்கிட்டு தோள்ல ஜோல்னா பை போட்டுட்டு வந்தா, உடனே நான் எஸ்கேப் ராசா..! சரி..சரி அடுத்த வாரம் "பல்லி கடிப்பேன்" படம் ஆடியோ ரிலீஸ்..எல்லாரும் வந்திருங்க..!

குஜய்: ண்ணா..ச்சும்மா காமெடி பண்ணாதீங்ண்ணா..! அதெல்லாம் ரிலீஸாகி...ஆகி..ஆகி..போங்ண்ணா..!

மஜித்:அப்புடி சொல்லுயா டலபதி..!

கவேக்: ஹேய்..இன்னைக்கி முடிவு பண்றேன்டா..! ஹீரோவா நடிச்சு நானும் ஒரு சூப்பர் ஸ்டார் ஆகுறேண்டா.

ம‌ஜித்: இனி,நானும் சூப்பர் ஸ்டார் ஆகுற வரைக்கும் பேஸ மாட்டேன்.

அதுக்காக டப்பிங் கூட பேஸ மாட்டேன்னா எப்பிடி பாஸ், தயவு செஞ்சு வாங்க பாஸ். மலேஷியா ஃபிளைட் வெயிட்டிங் பாஸ். "கீவனா" கூட வந்தாச்சு. என தரையில் விழுந்து புரண்டு அழுத படியே கத்துகிறார் "ட‌ரண்".

குஜய்க்கும் அவரது நைனாவிடமிருந்து ,போங்கிரஸில் இணைந்த க‌ருநாவுக்கரசருக்கு பொன்னாடை போர்த்தச் சொல்லி அஸைன்மெண்ட் வர கிர்ரடிக்கிறார்.

ஐ யாம் ஆல்ஸோ பிஸி இன் "மாறாத கொலைக்குத்து பில்லை" சூட்டிங்..ஸோ ஸீ யூ ஆல்.. என மஷாலும் பீட்டர் விட..

அப்போது, காற்றை கிழித்துக் கொண்டு, "TN-58" என்ற பதிவெண்ணில் ஒரு ஸ்கார்ப்பியோ வருகிறது.அதிலிருந்து இறங்குகின்றனர் சிலர். "ஹே..எல்லாரும் இங்கதான் இருக்கீங்களா..! மரியாதையா வந்து "ஆண் பங்கம்" படத்துல ஆளுக்கொரு கெஸ்ட் ரோல்ல நடிச்சு கொடுத்திட்டுப் போங்க.." என்று கத்தியாவாறே கறை வேட்டி ஒன்று கையில் அரிவாளோடு துறத்த,அவருடன் "முறுக்கிய மீசை கறை வேட்டிகள்" சிலரும் துறத்த, க‌ண்ணிமைக்கும் நேரத்தில், அப்பீட்டாகி ஓடி மறைகின்றனர் நம் கோடம்பாக்கத்து கிங்குகள்... !

டிஸ்கி1: ஆ.வி."லூஸுப்பையன்" பாதிப்பு.
டிஸ்கி2 : இங்கு வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கற்பனையே. யாரையாவது குறிப்பிடுமேயானால் அவை எழுத்துப்பிழை மற்றும் உங்கள் மன பிரமையே.. ஹி..ஹி

Next மீட் பண்ணுவோம்....
♠ராஜூ♠